ஞாயிறு, நவம்பர் 01, 2015

குறள் எண்: 0091 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0091}

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

விழியப்பன் விளக்கம்: அறம் அறிந்தவரின் வாயிலிருந்து, வெளிப்படும் சொற்கள்; அன்பு கலந்த, வஞ்சனையில்லாத - இனிய மொழியாய் இருக்கும்.
(அது போல்...)
மனிதம் கடைப்பிடிப்போர் மூலமாய், உருவாகும் செயல்கள்; அறம் சேர்ந்து, சுயமற்று - சமூகப் பொறுப்புடன் இருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக