சனி, நவம்பர் 21, 2015

குறள் எண்: 0111 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0111}

தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்

விழியப்பன் விளக்கம்: வேண்டியவர்/வேண்டாதவர் என்ற பேதமின்றி இருக்க முடிந்தால்; அந்த நடுநிலைமை எனும் ஒப்பற்ற தகுதி, நன்மைப் பயக்கும்.
(அது போல்...)
தன்கட்சி/எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி மக்களாட்சி அளித்தால்; அந்த சார்பின்மை அறிந்த இணையற்ற அரசாட்சி, மக்களைக் காக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக