சனி, ஜனவரி 06, 2018

குறள் எண்: 0888 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 089 - உட்பகை; குறள் எண்: 0888}

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி

விழியப்பன் விளக்கம்: அரத்தால் அறுக்கப்படும் பொன், தன் அளவை "சேதாரமாய்" இழப்பது போல்; உட்பகையால் பிளவுபடும் குடும்பம், அதன் வலிமையை "பரிகாரமாய்" இழக்கும்!
(அது போல்...)
செக்கில் அகப்படும் பொருள், தன் உருவை “சக்கையாய்” இழப்பது போல்; கொடுங்கோலால் ஆளப்படும் மக்கள், தம் வருமானத்தை “வரியாய்” இழப்பர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக