புதன், ஜனவரி 24, 2018

குறள் எண்: 0906 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0906}

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்

விழியப்பன் விளக்கம்: மனைவியின் அழகில் மயங்கி, மூங்கில் போன்ற அவள் தோளுக்குப் பயப்படுவோர்; தேவர்களுக்கு இணையாய் வாழ்ந்தாலும், புகழ் இல்லாதவரே!
(அது போல்...)
அரசியலாரின் ஊழலில் பங்கிட்டு, சேவகர் போன்ற அவர்களிடம் அடிபணியும் அதிகாரிகள்; மன்னர்களுக்கு இணையாய் வாழ்ந்தாலும், சுயம் இல்லாதோரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக