புதன், ஜனவரி 10, 2018

குறள் எண்: 0892 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0892}

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

விழியப்பன் விளக்கம்: நம்மிற் பெரியோரைப் பேணாமல் இருப்பின்; அப்பெரியோரின் ஆதரவு இல்லாத நிலைமை, என்றுமழியாத துன்பத்தை அளிக்கும்.
(அது போல்...)
நம் பெற்றோர்களுடன் இணையாமல் வாழ்ந்தால்; அவர்களின் வாழிகாட்டுதல் இல்லாத நிலைமை, அறமில்லாத சந்ததியை உருவாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக