திங்கள், ஜனவரி 22, 2018

குறள் எண்: 0904 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0904}

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று

விழியப்பன் விளக்கம்: உரிமையைப் பகிரும் அறமின்றி மனைவிக்கு அஞ்சும், மறுமைப் பயனை அடையாத கணவனின்; வினைகளைச் செய்யும் ஆளுமை, புகழடைதல் சாத்தியமில்லை!
(அது போல்...)
சட்டத்தை நிலைநாட்டும் முனைப்பின்றிக் குண்டர்களுக்கு அஞ்சி, மக்கள் சேவையை ஆற்றாத காவலர்களின்; கடமையைச் செய்யும் திறமை, சட்டவொழுங்கைக் காப்பதில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக