வெள்ளி, ஜனவரி 19, 2018

குறள் எண்: 0901 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0901}

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது

விழியப்பன் விளக்கம்: மனைவியை மட்டுமே நேசித்து மற்ற உறவுகளை மறுப்போர், இல்லறத்தின் பெரும்பயனை அடையார்! வினையை நேசிப்போர், வேண்டாத வரமும் அதுவேயாகும்!
(அது போல்...)
ஊழலை மட்டுமே பழகி மற்ற கடமைகளை மறப்போர், பொதுவாழ்வின் மகிமையை அடையார்! பொதுநலனைப் பேணுவோர், விரும்பாத அமுதமும் அதுவேயாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக