செவ்வாய், ஜனவரி 23, 2018

குறள் எண்: 0905 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0905}

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

விழியப்பன் விளக்கம்: பரஸ்பர உணர்வுப் பகிர்தல் இல்லாததால், மனைவிக்கு அஞ்சும் கணவன்; எந்நாளும், நல்லோர்க்கு நல்லவற்றை செய்ய அஞ்சுவர்.
(அது போல்...)
ஆழ்ந்த மக்களாட்சிப் புரிதல் இல்லாததால், மக்களுக்குத் துரோகம் செய்வோர்; எந்நிலையிலும், நம்பியோர்க்குத் துரோகம் செய்யத் தயங்கார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக