செவ்வாய், ஜனவரி 16, 2018

குறள் எண்: 0898 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0898}

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து

விழியப்பன் விளக்கம்: உயர்மலைக்கு நிகரான- பெரியோரின் வலிமையை, குறைவாக மதிப்பிட்டால்; பூமியில் நிலைத்து வாழ்பவர் போல் தோன்றியோரும், குடியோடு சேர்ந்து அழிவர்!
(அது போல்...)
பெருங்கடலுக்கு இணையான மக்களின் அதிகாரத்தை, இழிவாக எண்ணினால்; ஆட்சியில் நிரந்தரமாய் இருப்பவர் போல் தோன்றியவரும், கட்சியோடு சேர்ந்து வீழ்வர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக