சனி, ஜனவரி 20, 2018

குறள் எண்: 0902 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 091 - பெண்வழிச் சேறல்; குறள் எண்: 0902}

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

விழியப்பன் விளக்கம்: இல்லறக் கடமையைப் பேணாமல், மனைவியின் பெண்மையை மட்டுமே விரும்புவோரின் செல்வம்; மிகப்பெரிய அவமானமாக நிலைக்கும், அவமானத்தை அளிக்கும்!
(அது போல்...)
மக்களாட்சி தர்மத்தை உணராமல், மக்களின் சொத்துக்களை மட்டுமே அபகரிப்போரின் ஆட்சி; அதீதமான கொடுங்கோன்மையை வரையறுக்கும், கொடுங்கோன்மை நிறைந்திருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக