வெள்ளி, மே 06, 2016

குறள் எண்: 0278 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0278}

மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
மறைந்தொழுகு மாந்தர் பலர்

விழியப்பன் விளக்கம்: மனதில் தீய-எண்ணங்கள் நிறைந்திருக்க, தவமிருப்போர் இயல்புடன்; புனிதநீரில் குளித்து, பொய்யான ஒழுக்கத்துடன் வாழ்வோர் பலருண்டு.
(அது போல்...)
செயலில் ஒழுங்கீனங்கள் பலவிருக்க, மாமனிதர் இயல்புடன்; சொற்பொழிவில் கவர்ந்து, போலியான தோற்றத்துடன் வலம்வருவோர் பலருண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக