வெள்ளி, மே 20, 2016

குறள் எண்: 0292 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0292}

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

விழியப்பன் விளக்கம்: எந்த குற்றமும் இல்லாத, நன்மையை விளைவிக்கும் எனில்; பொய் கூட, வாய்மையின் தன்மையுடையதே ஆகும்.
(அது போல்...)
எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவை வலுப்படுத்தும் எனில்; ஆற்றாமை கூட, அன்பின் வடிவமே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக