சனி, மே 28, 2016

குறள் எண்: 0300 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0300}

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற

விழியப்பன் விளக்கம்: உண்மையை ஆராய்ந்து, நாம் கண்டறிந்த எல்லாவற்றிலும்; வாய்மையை விட நன்மையான வேறெதுவொன்றும், இருப்பதற்கு சாத்தியமில்லை.
(அது போல்...)
ஆனந்தத்தை உணர்ந்து, நாம் செய்திட்ட அனைத்திலும்; பகிர்வதை விட உயர்வானது வேறெதுவும், இருந்திட வாய்ப்பில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக