செவ்வாய், மே 31, 2016

குறள் எண்: 0303 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0303}

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்

விழியப்பன் விளக்கம்: சினம் கொள்வதால், தீய பின்விளைவுகள் விளையும் என்பதால்; எவரிடத்திலும் சினம் கொள்ளாமல், மறப்பது சிறந்ததாகும்.
(அது போல்...)
கடன் பெறுவதால், அதீத மனவழுத்தம் உருவாகும் என்பதால்; எதற்காகவும் கடன் பெறாமல், வாழ்வது உயர்ந்ததாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக