வியாழன், மே 26, 2016

குறள் எண்: 0298 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0298}

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

விழியப்பன் விளக்கம்: உடலை சுத்தமாய் வைப்பது, நீரால் சாத்தியமாவது போல்; உள்ளத்தைச் சுத்தமாய் வைப்பது, வாய்மையால் சாத்தியமாகும்.
(அது போல்...)
செயலை சரியாய் நிர்ணயிப்பது, சிந்தனையால் வலுவடைவது போல்;  சுயத்தைச் சரியாய் நிர்ணயிப்பது, சுய-ஆய்வால் வலுவடையும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக