சனி, மே 14, 2016

குறள் எண்: 0286 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0286}

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

விழியப்பன் விளக்கம்: திருட்டின் மேல், மிகுந்த ஆசையைக் கொண்டிருபோர்; தேவையான அளவுடன் வாழும் நெறியைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
(அது போல்...)
காழ்ப்புணர்வின் மேல், அதீத நாட்டத்தைக் கொண்டிருப்போர்; உண்மையான மனிதத்துடன் நேசிக்கும் உணர்வைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக