செவ்வாய், மே 17, 2016

குறள் எண்: 0289 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0289}

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

விழியப்பன் விளக்கம்: களவு தவிர மற்றவற்றை அறியாதோர்; அதையும் வரைமுறை இல்லாமல் செய்து, உடனடியாய் அழிவர்.
(அது போல்...)
புறங்கூறுதல் தவிர பிறசெயல்களைச் செய்யாதோர்; அதையும் குற்றவுணர்வே இல்லாமல் செய்து, உடனே கெட்டழிவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக