வியாழன், மே 12, 2016

குறள் எண்: 0284 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0284}

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்

விழியப்பன் விளக்கம்: திருட்டின் மீது அதிகரிக்கும் ஆசையானது; அதன் விளைவாக, என்றும் அழியாத துன்பத்தைக் கொடுக்கும்.
(அது போல்...)
கள்ளக்காதல் மேல் அதிகரிக்கும் மோகமானது; அதன் விளைவாய், சரிசெய்ய முடியாத சுய-அழிவை அளிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக