சனி, மே 21, 2016

குறள் எண்: 0293 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0293}

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

விழியப்பன் விளக்கம்: நம் மனதுக்கு பொய்யென தெரிந்தும், பொய்யைச் சொல்லக்கூடாது; அப்படி பொய் சொன்னபின், நம்மனமே நம்மை துன்புறுத்தும்.
(அது போல்...)
நம் உணர்வுக்கு துரோகமென தெரிந்தும், துரோகத்தைச் செய்யக்கூடாது; அப்படி துரோகம் செய்தபின், நம்சுயமே நம்மை காயப்படுத்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக