திங்கள், மே 16, 2016

குறள் எண்: 0288 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0288}

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் 
களவறிந்தார் நெஞ்சில் கரவு

விழியப்பன் விளக்கம்: தேவையை அறிந்தவர் நெஞ்சில், அறம் நிலைத்திருப்பது போல்; களவை அறிந்தவர் நெஞ்சில், வஞ்சனை நிலைத்திருக்கும்.
(அது போல்...)
தேடலைத் தொடர்வோர் மனதில், புரிதல் வலுவடைவது போல்; ஊழலைத் தொடர்வோர் மனதில், பேராசை வலுவடையும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக