திங்கள், மே 09, 2016

குறள் எண்: 0281 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0281}

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

விழியப்பன் விளக்கம்: பிறரால் இகழப்படாத நிலையில் வாழ்ந்திட நினைப்போர்; எந்த பொருளையும், களவாட எண்ணாத நிலையில் தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
(அது போல்...)
பிறரால் வெல்லமுடியாத நிலையில் இருக்கும் விருப்பமுடையோர்; எவர் ஒருவரையும், வஞ்சிக்க முயலாத வகையில் தன் செயலை நிர்ணயிக்க வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக