திங்கள், மே 23, 2016

குறள் எண்: 0295 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 030 - வாய்மைகுறள் எண்: 0295}

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

விழியப்பன் விளக்கம்: மனசாட்சியோடு உடன்பட்டு, உண்மை பேசுவோர்; தவத்துடன், தானமும் பழகுவோரை விட உயர்ந்தவராவர்.
(அது போல்...)
கொள்கையுடன் ஒன்றுபட்டு, அரசியல் செய்வோர்; அதிகாரத்துடன், படையும் கொண்டோரை விட வல்லவர்களாவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

2 கருத்துகள்: