சனி, மே 07, 2016

குறள் எண்: 0279 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  028 - கூடாவொழுக்கம்குறள் எண்: 0279}

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
வினைபடு பாலால் கொளல்

விழியப்பன் விளக்கம்: நேரான அம்பு கொடியது செய்யும்! வளைவான யாழ், இனிமையான இசைதரும்! அதுபோல், ஒருவரை - பேச்சால் அல்லாது செயலால் வரையறுத்தல் வேண்டும்.
(அது போல்...)
முரடான பலாப்பழம் அமிழ்தாய் இனிக்கும்! வழவழப்பான எட்டிப்பழம் உயிரை அழிக்கும்! அதுபோல், ஓர்-உறவை - அழகால் அல்லாது அன்பால் நிர்ணயிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக