புதன், மே 11, 2016

குறள் எண்: 0283 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0283}

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

விழியப்பன் விளக்கம்: திருட்டினால் விளையும் செல்வம்; அளவுக்கதிகமாய் பெருகுவது போலத் தோன்றி, இறுதியில் மொத்தமாய் அழியும்.
(அது போல்...)
போதை-வஸ்துகளால் கிடைக்கும் இன்பம்; மென்மேலும் அதிகமாவது போலத் தோன்றி, பின்னர் துன்பமாய் முடியும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக