ஞாயிறு, மே 29, 2016

குறள் எண்: 0301 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0301}

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென்

விழியப்பன் விளக்கம்: அதிகாரம் உள்ள இடத்தில் சினத்தைக் காப்போரே, சினங்காப்பவர் ஆவர்;  அதிகாரம் இல்லாத இடத்தில், சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன??
(அது போல்...)
பசியால் துடிக்கும் உயிர்கட்கு உணவை அளிப்பதே, அன்னதானம் ஆகும்; பசி இல்லாத உயிர்கட்கு, உணவை அளித்தால் என்ன? அளிக்காவிட்டால் என்ன??
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக