செவ்வாய், ஜூன் 06, 2017

குறள் எண்: 0674 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 068 - வினைசெயல்வகை; குறள் எண்: 0674}

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்

விழியப்பன் விளக்கம்: முற்றுப்பெறாத வினை மற்றும் பகை, இவ்விரண்டின் எச்சத்தை ஆராய்ந்தால்; தீயின் எச்சத்தைப் போல, அழிவை உருவாக்குவதை அறியலாம்.
(அது போல்...)
திருப்தியற்ற காமம் மற்றும் உறவு, இவையிரண்டின் விளைவை ஆராய்ந்தால்; பூகம்பத்தின் விளைவைப் போல, உறுதியைத் தகர்ப்பதை உணரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக