வியாழன், ஜூன் 15, 2017

குறள் எண்: 0683 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0683}

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு

விழியப்பன் விளக்கம்: கற்றறிந்தோர் முன், நூல்களைக் கற்று வல்லவனாவது;  வேலேந்தியோர் முன், வெற்றியை ஈட்டும் வினைகளை உரைக்கும் தூதுவர்களின் பண்பாகும்.
(அது போல்...)
குடும்பத்தினர் முன், இல்லறத்தைச் சிறப்பித்து வாழ்வது; சமூகத்தினர் முன், ஒழுக்கத்தை போதிக்கும் பணியை மேற்கொள்ளும் படைப்பாளிகளின் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக