ஞாயிறு, ஜூன் 18, 2017

குறள் எண்: 0686 (விழியப்பன் விளக்கவுரை)


{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0686}


கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது

விழியப்பன் விளக்கம்: அறநூல்களைக் கற்று, பகைவரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல்; மனம் மகிழும் வண்ணம் சொல்லி, காலத்திற்கு ஏற்றதை அறிந்திருப்பதே தூது ஆகும்.
(அது போல்...)
நல்லவர்களை அறிந்து, இனவாதிகளின் வளர்ச்சிக்கு வித்திடாமல்; மனசாட்சி சொல்லும் வண்ணம் பயணித்து, சமூகத்திற்கு உகந்ததை ஆதரிப்பதே தேசபக்தி ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக