வியாழன், ஜூன் 01, 2017

குறள் எண்: 0669 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0669}

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

விழியப்பன் விளக்கம்: கேடில்லாமல் இன்பம் பயக்கும் வினைகளை, எத்தனைத் துன்பங்கள் தடையாக வந்தாலும்; துணிவைத் துணையாகக் கொண்டு செய்யவேண்டும்.
(அது போல்...)
தடையில்லாமால் ஊக்கம் அளிக்கும் நட்புகளை, எத்தனை ஊடல்கள் பிரச்சனையாக வளர்ந்தாலும்; அன்பை அறமாகக் கருதித் தொடரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக