திங்கள், ஜூன் 19, 2017

குறள் எண்: 0687 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0687}

கடன்அறிந்து காலங் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை

விழியப்பன் விளக்கம்: மேற்கொண்ட கடமையை அறிந்து, காலத்தை மனதில் கொண்டு; சூழலை ஆராய்ந்து, அனைத்தையும் கணக்கிட்டு உரைக்கும் தூதரே உயர்ந்தவர் ஆவர்.
(அது போல்...)
கொடுக்கப்பட்ட பிறவியை உணர்ந்து, இருக்கும் ஆயுளைக் கொண்டு; சூழ்ந்தோரை ஆராய்ந்து, அனைவரையும் அரவணைத்து வாழ்வதே சிறந்த பிறவிக்கடன் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக