புதன், ஜூன் 14, 2017

குறள் எண்: 0682 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 069 - தூது; குறள் எண்: 0682}

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று

விழியப்பன் விளக்கம்: அன்பு/அறிவு/தெளிவாக உரைக்கும் சொல்வன்மை - இம்மூன்றும், தூது உரைப்பவருக்கு முக்கியமான காரணிகளாகும்.
(அது போல்...)
நம்பிக்கை/உண்மை/பரஸ்பரம் பாசத்தைப் பகிர்தல் - இம்மூன்றும், இல்லறத்தில் இணைவோர்க்குத் தேவையான பண்புகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக