புதன், மே 31, 2017

குறள் எண்: 0668 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 06 - அமைச்சியல்; அதிகாரம்: 067 - வினைத்திட்பம்; குறள் எண்: 0668}

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்

விழியப்பன் விளக்கம்: குழப்பம் இல்லாமல், தெளிவான சிந்தனையோடு திட்டமிட்ட வினைகளை; மனச்சோர்வும்/உடற்சோர்வும் இல்லாமல், விரைந்து செய்யவேண்டும்.
(அது போல்...)
அறவழியை மீறாமல், உண்மையான உழைப்பால் பெற்ற வருமானத்தை; பேராசையும்/பொறாமையும் இல்லாமல், மனமுவந்து பகிரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக