செவ்வாய், அக்டோபர் 02, 2018

குறள் எண்: 1157 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1157}

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை

விழியப்பன் விளக்கம்: தான் மறைத்தாலும், கையின் மணிக்கட்டில் கழலும் நிலையிலுள்ள வளையல்கள்; துணைவனவன் பிரிந்த செய்தியை, ஊருக்கு அறிவிக்காமல் இருக்குமோ?!
(அது போல்...)
நாம் தடுத்தாலும், மனதின் ஆழத்தில் எரியும் நிலையிலுள்ள நினைவுகள்; எதிரியவன் செய்த சதியை, பிறருக்கு உணர்த்தாமல் இருக்குமோ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக