ஞாயிறு, அக்டோபர் 07, 2018

குறள் எண்: 1162 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 117 - படர் மெலிந்து இரங்கல்; குறள் எண்: 1162}

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

விழியப்பன் விளக்கம்: காதலால் விளையும் காமநோயை, மறைப்பதை செய்வதறியேன்! நோயை உருவாக்கியவரிடம் சொல்வதும், நாணத்தைத் தரும் என்பதால்; அதையும் செய்கலேன்!
(அது போல்...)
ஆசையால் விளையும் தீயசிந்தனையை, மறுப்பதை செய்வதறியேன்! சிந்தனையை செயலாக்க முயல்வதும், துன்பத்தைத் தரும் என்பதால்; அதையும் செய்கலேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக