புதன், அக்டோபர் 24, 2018

குறள் எண்: 1179 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1179}

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்

விழியப்பன் விளக்கம்: காதலர் வராதபோதும் தூங்காமல், வந்தபோதும் தூங்காமல்; மத்தளம் போல் இருவழியிலும், அரிய கொடுமையான துன்பத்தை அடைந்தன கண்கள்!
(அது போல்...)
சோம்பல் வராதபோதும் முனையாமல், வந்தபோதும் முனையாமல்; உலக்கை போல் இருபுறமும், அதிக ஆழமானச் சிதறலை அடைந்தன சிந்தனைகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக