வெள்ளி, அக்டோபர் 19, 2018

குறள் எண்: 1174 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1174}

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து

விழியப்பன் விளக்கம்: குணப்படுத்த முடியாத மற்றும் அழிவில்லாத, காதல் எனும் நோயை எனக்கு அளித்துவிட்டு; கண்ணீரைப் பொழிய முடியாத, நீர் வற்றிய கண்களும் வருந்துகின்றன!
(அது போல்...)
விடுதலை இல்லாத மற்றும் முடிவில்லாத, ஆட்சி எனும் கொடுங்கோலே யாமே தேர்ந்தெடுத்து; விமர்சனம் செய்ய முடியாத, சுயம் இழந்த நாங்களும் வருந்துகிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக