வெள்ளி, அக்டோபர் 26, 2018

குறள் எண்: 1181 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 119 - பசப்புறு பருவரல்; குறள் எண்: 1181}

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற

விழியப்பன் விளக்கம்: என்னை விரும்பியவர்க்காக, அவர் அளித்த பிரிவை ஏற்றேன்! இப்போது பிரிவுத் துயரால் பசலை நோய் கொண்ட என் நிலையை, வேறு யார்க்கு தான் உரைப்பதோ? 
(அது போல்...)
நம்மை ஆள்வதற்காக, அரசியலார் அளித்த இலவசத்தை ஏற்றோம்! இன்று இலவசம் தந்ததால் கருவூலம் வீழ்ச்சி அடைந்த நம் தவறுக்கு, வேறு யாரிடம் மன்னிப்பு கோருவதோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக