புதன், அக்டோபர் 03, 2018

குறள் எண்: 1158 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1158}

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு

விழியப்பன் விளக்கம்: ஒத்த உணர்வுடையோர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது! இனிய வாழ்க்கைத் துணையின் பிரிவு, அதைவிட துன்பமானது!
(அது போல்...)
ஒத்த இலக்குடையோர் இல்லாத குழுவில் பணிபுரிவது கொடுமையானது! நல்ல குழு மேலாளரின் பணிமாற்றம், அதைவிட கொடுமையானது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக