புதன், அக்டோபர் 17, 2018

குறள் எண்: 1172 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1172}

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்

விழியப்பன் விளக்கம்: ஆராய்ந்து உணராமல், அன்று கண்டதும் காதலுற்ற கண்களே! நடந்த பிரிவை உணராமல், இன்றும் உடனடியாய் துன்பத்தில் வருந்துவது ஏன்?
(அது போல்...)
தகுதியை மதிப்பிடாமல், அன்று கொடுத்ததும் வாக்களித்த மக்களே! நடந்த தவறை உணராமல், இன்றும் அவசரமாய் கோபத்தில் விமர்சிப்பது ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக