வியாழன், அக்டோபர் 25, 2018

குறள் எண்: 1180 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1180}

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து

விழியப்பன் விளக்கம்: எம்போல், பறையடித்து அறிவிக்கும் கண்களை உடையோரிடம்; காதற்பிரிவு மறைக்கப்படுவதை அறிவது, ஊரில் இருப்போர்க்கு அரிதானது அல்லவே!
(அது போல்...)
தவளைபோல், குரலெழுப்பி சொல்லும் குணம் உடையோருடன்; கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடுவது, அவருடன் இருப்போர்க்கு உகந்தது அல்லவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக