வெள்ளி, அக்டோபர் 12, 2018

குறள் எண்: 1167 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 117 - படர் மெலிந்து இரங்கல்; குறள் எண்: 1167}

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்

விழியப்பன் விளக்கம்: காதலால் விளையும் காமம் எனும் பெருங்கடலில், தொடர்ந்து நீந்தியும் கரையை அடையாமல் தவிக்கிறேன்! நள்ளிரவிலும், நான் மட்டுமே தனித்து இருக்கிறேன்!
(அது போல்...)
தேடலால் விளையும் பணம் எனும் பேரரங்கில், தொடர்ந்து ஓடியும் முடிவே இல்லாமல் ஓடுகிறேன்! எஞ்ஞான்றும், நான் மட்டுமே தனியே தேடுகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக