வியாழன், அக்டோபர் 11, 2018

குறள் எண்: 1166 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 117 - படர் மெலிந்து இரங்கல்; குறள் எண்: 1166}

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது

விழியப்பன் விளக்கம்: காதலில் விளையும் காமம் தரும் மகிழ்ச்சி, கடலளவு பெரிது! ஆனால், பிரிவு நேரும்போது; அதே காம உணர்வு தரும் துன்பம், கடலை விட மிகப் பெரிது!
(அது போல்...)
புரிதலில் விளையும் சிந்தனை தரும் முழுமை, வானளவு பரந்தது! ஆனால், குழப்பம் நேரும்போது; அதே சிந்தனைச் சிதறல் தரும் குறை, வானை விட மிகப் பரந்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக