திங்கள், அக்டோபர் 22, 2018

குறள் எண்: 1177 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1177}

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்

விழியப்பன் விளக்கம்: விரும்பி மகிழ்ந்து, தொடர்ந்து அவரைக் கண்ட கண்களே! அவரைப் பிரிந்த துன்பத்தால், வருந்தி வருந்தி உம்முள் இருக்கும் கண்ணீர் அற்றுப் போக!
(அது போல்...)
விரும்பி ஏற்று, தொடர்ந்து ஆட்சியை அளித்த மக்களே! அவர்கள் செய்த கொடுங்கோன்மையால், வாழ்விழந்து வாழ்விழந்து உம்மிடம் இருக்கும் ஆதரவு அழிந்து போக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக