சனி, அக்டோபர் 13, 2018

குறள் எண்: 1168 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 117 - படர் மெலிந்து இரங்கல்; குறள் எண்: 1168}

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை

விழியப்பன் விளக்கம்: புவியிலுள்ள எல்லா உயிர்களையும், உறங்க வைத்து அமைதி அளித்த இரவு; காதற்பிரிவால் தனித்திருக்கும் என்னைத் தவிர்த்து, வேறு துணையின்றி இருக்கிறது!
(அது போல்...)
சமூகத்திலுள்ள எல்லா மதங்களையும், இணைய வைத்து ஒற்றுமை அளித்த மனிதம்; மதப்பிரிவால் பிறந்திருக்கும் பிரிவினைத் தவிர்த்து, வேறு வழியின்றி இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக