திங்கள், அக்டோபர் 01, 2018

குறள் எண்: 1156 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1156}

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை

விழியப்பன் விளக்கம்: வாழ்க்கைத் துணையானவர், துயரமின்றி பிரிவை உரைக்கும் கொடியவர் ஆயின்; தேவையான அன்பை அவர் வழங்குவார், என்னும் விருப்பம் அர்த்தமற்றது ஆகும்!
(அது போல்...)
ஆட்சியை நடத்துவோர், கவலையின்றி வரியை உயர்த்தும் கொடுங்கோலர் எனில்; வேண்டிடும் மாற்றத்தை அவர் அளிப்பார், என்னும் நம்பிக்கை மூடமானது ஆகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக