வெள்ளி, அக்டோபர் 05, 2018

குறள் எண்: 1160 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1160}

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்

விழியப்பன் விளக்கம்: குடும்பத்தைப் பிரியும் அரிய செயல் செய்து, வறுமையெனும் துன்ப நோயை நீக்குவோரும்; அப்பிரிவை ஏற்று, தொலை தூரத்திற்குப் பின்னிருந்து வாழ்வோரும் பலருண்டு!
(அது போல்...)
வாழ்வை இழக்கும் அரிய செயல் செய்து, ஊழலெனும் தீய சக்தியை அழிப்போரும்; அவ்விழப்பை உணர்ந்து, வெகு காலத்திற்கு தொடர்ந்து வருவோரும் பலருண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக