புதன், அக்டோபர் 10, 2018

குறள் எண்: 1165 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 117 - படர் மெலிந்து இரங்கல்; குறள் எண்: 1165}

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்

விழியப்பன் விளக்கம்: காதல் எனும் நட்பில் உள்ளபோதே, பிரிவு எனும் துயர் அளிக்கும் காதலர்; பகைமை வளர்ந்திடின், என்னவாக ஆவாரோ?!
(அது போல்...)
தேசம் எனும் பிணைப்பில் உள்ளபோதே, பிரிவினை எனும் கொடுங்கோல் புரியும் அரசியலார்; தேசம் பிரிந்திடின், என்னவெல்லாம் செய்வரோ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக