செவ்வாய், அக்டோபர் 23, 2018

குறள் எண்: 1178 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1178}

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்

விழியப்பன் விளக்கம்: மனதால் விரும்பாமல், சொல்லால் விரும்பியோர் இருக்கிறார்கள் தானே? ஆனாலும், அவர்களைக் காணாமல் அமைதி கொள்வதில்லை கண்கள்!
(அது போல்...)
செயலால் செய்யாமல், வாக்குறுதியால் செயதோர் இருக்கிறார்கள் தானே? ஆனாலும், அவர்களை ஆதரிக்காமல் திருப்தி அடைவதில்லை தொண்டர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக