ஞாயிறு, அக்டோபர் 14, 2018

குறள் எண்: 1169 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 117 - படர் மெலிந்து இரங்கல்; குறள் எண்: 1169}

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா

விழியப்பன் விளக்கம்: விடியலை நோக்கி விழித்தே இருந்ததால், நீண்டதாய் கழியும் இரவுடைய இந்நாள்; கொடியரான வாழ்க்கைத்துணை பிரிந்த கொடுமையை விட, கொடுமையாகும்!
(அது போல்...)
மாற்றத்தை நோக்கி மெளனித்தே இருந்ததால், துன்பமாய் தொடரும் இயல்புடைய இவ்வாழ்க்கை; கொடுங்கோலான அரசாள்வோர் செலுத்தும் கொடுங்கோன்மையை விட, கொடுங்கோலாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக