செவ்வாய், அக்டோபர் 16, 2018

குறள் எண்: 1171 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 118 - கண்விதுப்பு அழிதல்; குறள் எண்: 1171}

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது

விழியப்பன் விளக்கம்: காதல் எனும் தணியாத நோயை, கண்கள் தாம் காட்டவே யாம் அறிந்தோம்! பிரிந்திருக்கும் காதலரைக் காட்டாமல், இப்போது கண்கள் தாமும் அழுவது எதனாலோ?
(அது போல்...)
குடும்பம் எனும் தீராத சிக்கலில், பெற்றோர் தாம் சொல்லவே நாம் நுழைந்தோம்! சேர்ந்திருக்கும் சிக்கலை அவிழ்க்காமல், இப்போது பெற்றோர் தாமும் சிக்கலாக்குவது எதனாலோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக